🔗

புகாரி: 808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

رَأَى رَجُلًا لَا يُتِمُّ رُكُوعَهُ، وَلاَ سُجُودَهُ فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ: «مَا صَلَّيْتَ؟» قَالَ: وَأَحْسِبُهُ قَالَ: «وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


பாடம் : 131 சஜ்தாவின் போது கால் விரல்களைக் கிப்லாவை நோக்கி வைப்பது.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (குறிப்பு: காண்க ஹதீஸ் எண்-828)

பாடம் : 132 சஜ்தாவை பூரணமாக (நிதானத்துடன்) செய்யாவிட்டால் (ஏற்படும் கேடுகள்). 

808. அபூ வாயில் அறிவித்தார்.

ருகூவையும் ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாத ஒரு மனிதரை ஹுதைஃபா(ரலி) கண்டார்கள். அம்மனிதர் தொழுது முடித்தபோது அவரை நோக்கி ‘நீ தொழவில்லை’; இந்நிலையில் நீ மரணித்துவிட்டால் நபி வழி அல்லாத வேறு வழியில் நீ மரணித்தவனாவாய்’ என்று கூறினார்கள்.
Book : 10