«اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الكَلْبِ»
பாடம்: 141
சஜ்தாவில் கைகளைப் பரப்பி வைக்கலாகாது.
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது கைகளைப் பரப்பி வைக்காமலும் அவற்றை (விலாவுடன்) ஒடுக்கி வைக்காமலும் சஜ்தாச் செய்தார்கள் என அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) கூறியுள்ளார்கள்.
822. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
‘ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது.’ என அனஸ் (ரலி) அறிவித்தார்
அத்தியாயம்: 10