«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِي المَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ»
பாடம் : 151 தொழுது முடிக்கும்வரை நெற்றி, மூக்கு ஆகியவற்றில் படிந்தவற்றைத் துடைக்காமலிருப்பது.
அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தொழும் போது நெற்றியைத் துடைக்கலாகாது என்று ஹுமைதீ (அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர்-ரஹ்) அவர்கள் கூறக் கண்டேன்.
836. அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தண்ணீரும் மண்ணும் கலந்த இடத்தில் ஸுஜூது செய்வதை பார்த்தேன். அவர்களின் நெற்றியில் மண் படிந்திருந்ததையும் கண்டேன்.
Book : 10