🔗

புகாரி: 841

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«أَنَّ رَفْعَ الصَّوْتِ، بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ المَكْتُوبَةِ كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ»


பாடம்: 155

தொழுகைக்குப்பின் (அல்லாஹ்வை போற்றித் துதித்து) திக்ர் செய்வது.

841. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (ஸலாம் கூறி) கடமையான தொழுகையை முடிக்கும்போது சப்தமாக (அல்லாஹ்வைப் போற்றி) ‘திக்ர்’ செய்யும் நடைமுறை நபி (ஸல்) அவர்களது (ஆரம்ப) காலத்தில் (கற்றுக் கொடுப்பதற்காக) இருந்தது.

அவ்வாறு மக்கள் கூறக் கேட்டால், அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.


அத்தியாயம்: 10