أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ – يَعْنِي الثُّومَ – فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا»
பாடம் : 160 சமைக்கப்படாத வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டுள்ளி (போன்ற வாடையுள்ளவற்றைச்) சாப்பிடுவது குறித்து வந்துள்ளவையும், பசி காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ வெள்ளைப் பூண்டு,வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளிவாசலுக்கு நெருங்கவேண்டாம் எனும் நபி மொழியும்.
853. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
‘இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியை நெருங்க வேண்டாம்’ என்று கைபர் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 10