🔗

புகாரி: 857

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம் : 161 சிறுவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பருவத்தில் கடமையாகும் என்பதும்,

கூட்டுத் தொழுகை (ஜமாஅத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸாத் தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்து கொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும். 

857. ஸுலைமான் ஷைபானி கூறினார்:

‘நபி(ஸல்) அவர்கள் தனியாக இருந்த ஒரு கப்ருக்கருகே சென்று (ஜனாஸாவுக்காகத்) தொழுகை நடத்தினார்கள். மக்களும் அணி வகுத்து நின்றனர் என்று நபி(ஸல்) அவர்களுடன் அப்போது சென்றிருந்த ஒருவர் எனக்குக் கூறினார்’ என்று ஷஃபீ சொன்னார். அவரிடம் நான் அபூ அம்ரே உமக்கு இதைக் கூறியவர் யார்? என்று கேட்டேன். ‘இப்னு அப்பாஸ்(ரலி)’ என்று அவர் பதில் கூறினார்.
Book : 10