🔗

புகாரி: 861

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلاَمَ، «وَرَسُولُ اللَّهِ  صلّى الله عليه وسلم يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ»


861. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் ஒரு பெட்டைக் கழுதையின் மேல் ஏறி வந்தேன். அப்போது நான் பருவம் அடையும் வயதை நெருங்கியவனாக இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ‘மினா’வில் (முன்னால்) சுவர் எதுவுமின்றித் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் வரிசைகளுக்கிடையே கடந்து சென்று (கழுதையிலிருந்து) இறங்கிக் கழுதையை மேய்வதற்காக அவிழ்த்து விட்டேன். பின்னர் வரிசையில் சேர்ந்து கொண்டேன். இது விஷயமாக எவரும் என்னைக் கண்டிக்கவில்லை.
Book :10