🔗

புகாரி: 864

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعَتَمَةِ، حَتَّى نَادَاهُ عُمَرُ: نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا يَنْتَظِرُهَا أَحَدٌ غَيْرُكُمْ مِنْ أَهْلِ الأَرْضِ» وَلاَ يُصَلَّى يَوْمَئِذٍ إِلَّا بِالْمَدِينَةِ، وَكَانُوا يُصَلُّونَ العَتَمَةَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ الأَوَّلِ


பாடம்: 162

இரவிலும், (ஃபஜ்ருக்காக) அதிகாலை இருட்டிலும் பெண்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்வது. 

864. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். “பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்கள், “இப்பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர்ப் பார்த்திருக்கவில்லை” என்று கூறினார்கள்.

அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை மக்கள் தொழுது வந்தனர்.

அத்தியாயம்: 10