🔗

புகாரி: 906

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اشْتَدَّ البَرْدُ بَكَّرَ بِالصَّلاَةِ، وَإِذَا اشْتَدَّ الحَرُّ أَبْرَدَ بِالصَّلاَةِ»، يَعْنِي الجُمُعَةَ

قَالَ يُونُسُ بْنُ بُكَيْرٍ: أَخْبَرَنَا أَبُو خَلْدَةَ، فَقَالَ: بِالصَّلاَةِ وَلَمْ يَذْكُرِ الجُمُعَةَ، وَقَالَ بِشْرُ بْنُ ثَابِتٍ: حَدَّثَنَا أَبُو خَلْدَةَ، قَالَ: صَلَّى بِنَا أَمِيرٌ الجُمُعَةَ، ثُمَّ قَالَ لِأَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَيْفَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ؟


பாடம் 17 ஜுமுஆ நாளில் வெப்பம் கடுமையாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?) 

906. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும்போது ஜும்ஆத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவார்கள். கோடை கடுமையாக இருக்கும்போது ஜும்ஆவைத் தாமதமாக்குவார்கள்.

யூனுஸ் இப்னு புகைர் அறிவிக்கும் ஹதீஸில் ஜும்ஆ என்று கூறாமல் தொழுகை என்று கூறுகிறார்.

பிஷ்ரு இப்னு ஸாபித் அறிவிக்கும் ஹதீஸில் ‘எங்களுக்கு அமீர் ஜும்ஆத் தொழுகை நடத்தினார். பிறகு ஜும்ஆத் தொழுகை நடத்தினார். பிறகு அனஸ்(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்கள் எப்போது லுஹர் தொழுவார்கள்’ என்று விசாரித்தார். (அதற்குத்தான் அனஸ்(ரலி) மேற்கண்டவாறு விடையளித்தார்கள்)’ எனக் குறிப்பிடுகிறார்.
Book : 11