«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ، ثُمَّ يَقُومُ كَمَا تَفْعَلُونَ الآنَ»
பாடம் : 27 நின்று கொண்டு சொற்பொழிவாற்றுவது.
நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவில்) நின்று கொண்டு உரையாற்றினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். (குறிப்பு: காண்க: பின்வரும் ஹதீஸ்-1013, 1014)
920. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நீங்கள் இப்போது செய்து வருவது போன்றே நபி(ஸல்) அவர்கள் நின்ற நிலையில் உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து, பிறகு எழக்கூடியவர்களாக இருந்தனர்.
Book : 11