بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الجُمُعَةِ، إِذْ قَامَ رَجُلٌ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: هَلَكَ الكُرَاعُ، وَهَلَكَ الشَّاءُ، فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا، فَمَدَّ يَدَيْهِ وَدَعَا
பாடம் : 34 சொற்பொழிவின் போது (இமாம் தமது) கைகளை ஏந்துவது.
932. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழிந்துவிட்டன. ஆடுகளும் அழிந்துவிட்டன. எங்களுக்கு மழை பொழிவிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் நீட்டித் பிரார்த்தித்தார்கள்.
Book : 11