«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ المَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ العِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ»
பாடம்: 39
ஜுமுஆத் தொழுகைக்குப் பின்பும் முன்பும் உள்ள (சுன்னத்தான) தொழுகை.
937. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் 2 ரக்அத்களும், லுஹருக்கு பின் 2 ரக்அத்களும் தொழுபவர்களாகவும்; மஃரிபுக்குப் பிறகு தம் வீட்டில் 2 ரக்அத்கள் தொழுபவர்களாகவும்; இஷாவுக்குப் பிறகு 2 ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர்.
ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர்.
அத்தியாயம்: 11