🔗

புகாரி: 951

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ، فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا»


பாடம்: 3

இரு பெரு நாட்களிலும் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை (சுன்னத்). 

951. பராஃ (ரலி) அறிவித்தார்.

‘நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையைப் பேணியவராவார்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம்: 13