🔗

புகாரி: 989

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الفِطْرِ، فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا وَمَعَهُ بِلاَلٌ»


பாடம் : 26 பெரு நாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் (வேறு தொழுகைகள்) தொழலாமா?

பெரு நாள் தொழுகைக்கு முன் (வேறு தொழுகைகள்) தொழுவதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர் என சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

989. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலாலும் சென்றனர்.
Book : 13