لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ جَعَلَ النِّسَاءُ وَالصِّبْيَانُ وَالْوَلَائِدُ يَقُلْنَ:
[البحر الرمل]
طَلَعَ الْبَدْرُ عَلَيْنَا … مِنْ ثَنِيَّاتِ الْوَدَاعْ
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا … مَا دَعَا لِلَّهِ دَاعْ …
2032. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும் “எங்களின் மீது முழுநிலா உதித்துவிட்டது; நன்றி செய்வது எங்கள் மீது கடமை ஆகிவிட்டது; மக்காவிற்கு விடை கொடுத்துவிட்டு எங்களிடம் அனுப்பப்பட்டவரே! அல்லாஹ்வின் பால் அழைக்கக்கூடியவர் அழைக்கும் போது … கட்டுப்பட்டு நடக்கும் ஆணையைக் கொண்டு வந்துவிட்டீர்”(என்று கவி பாடினார்கள்).
அறிவிப்பவர்: இப்னு ஆயிஷா (உபைதுல்லாஹ் பின் முஹம்மத் பின் ஹஃப்ஸ்)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
நம்முடைய (ஆசிரியர்களான) அறிஞர்கள் இந்தச் செய்தியில் கூறப்படும் நிகழ்வு நபி (ஸல்) அவர்கள் முதன்முதலாக மக்காவிலிருந்து மதீனாவுக்கு வருகை தந்தபோது நடந்தது என கூறுகின்றனர். தபூக் போரிலிருந்து வதா மலைக் குன்று வழியாக மதீனாவுக்கு வந்தபோது அல்ல. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
தபூக் போரிலிருந்து வதா மலைக் குன்று வழியாக வந்த நிகழ்வையும் இதற்கு முன்பு கூறியுள்ளோம்.