” قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَلَمَّا دَخَلَ الْمَدِينَةَ جَاءَتِ الْأَنْصَارُ بِرِجَالِهَا وَنِسَائِهَا، فَقَالُوا: إِلَيْنَا يَا رَسُولَ اللهِ فَقَالَ: «دَعُوا النَّاقَةَ فَإِنَّهَا مَأْمُورَةٌ» ، فَبَرَكَتْ عَلَى بَابِ أَبِي أَيُّوبَ قَالَ: فَخَرَجَتْ جَوَارٍ مِنْ بَنِي النَّجَّارِ يَضْرِبْنَ بِالدُّفُوفِ وَهُنَّ يَقُلْنَ:
[البحر الرجز]
نَحْنُ جَوَارٍ مِنْ بَنِي النَّجَّارْ … يَا حَبَّذَا مُحَمَّدٌ مِنْ جَارْ
فَخَرَجَ إِلَيْهِمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَتُحِبُّونِي؟» فَقَالُوا: إِي وَاللهِ يَا رَسُولَ اللهِ قَالَ: «وَأَنَا وَاللهِ أُحِبُّكُمْ، وَأَنَا وَاللهِ أُحِبُّكُمْ، وَأَنَا وَاللهِ أُحِبُّكُمْ»
784. “நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வருகை தந்தபோது அன்ஸாரிகளில் உள்ள ஆண்களும் பெண்களும் எங்கள் வீடுகளுக்கு வாருங்கள் என்று கூறி(அழைத்த)னர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (நான் வரும் இந்த) ஒட்டகத்தை அதன்போக்கில் விட்டுவிடுங்கள். அது (அல்லாஹ்வால்) கட்டளையிடப்பட்டுள்ளது என்று கூறினார்கள். (பிறகு) அந்த ஒட்டகம் அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அவர்களின் வீட்டு வாசல் முன் கால்மடித்து படுத்தது.
அப்போது பனூ நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த பெண்களில் சிலர் (தஃப்) கஞ்சிரா எனும் இசைக் கருவியை அடித்தவர்களாக (கீழ்கண்ட) கவிதைகளைப் படித்தனர்:
“நாங்கள், பனூ நஜ்ஜாரைச் சேர்ந்த பெண்கள்; முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களின் அண்டை வீட்டாராக இருப்பது எவ்வளவு சிறப்புமிக்கது!.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் என்மீது நேசம் வைத்துள்ளீர்களா? என்று கேட்க, அவர்கள் ஆம். அல்லாஹ்வின் மீதாணையாக! நேசம் வைத்துள்ளோம் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் உங்கள் மீது நேசம் வைத்துள்ளேன் என்று (மூன்று தடவைக்) கூறினார்கள்.