«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ».
பாடம்:
ஸஹர் நேரம்.
2182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை (ஹம்மாத் பின் ஸலமாவிடமிருந்து அறிவிக்கும் அப்துல்அஃலா என்பவர் நபியின் கூற்றாக அறிவித்திருப்பதைப் போன்றே) ரவ்ஹு பின் உபாதாவும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார் என அபூதாவூத் இமாம் கூறினார்.