🔗

daraqutni-315: 315

ஹதீஸின் தரம்: More Info

عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ , وَإِعْفَاءُ اللِّحْيَةِ , وَالسِّوَاكُ , وَالِاسْتِنْشَاقُ بِالْمَاءِ , وَقَصُّ الْأَظْفَارِ , وَغَسْلُ الْبَرَاجِمِ , وَنَتْفُ الْإِبْطِ , وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ “.

قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌ: نَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ يَكُونَ الْمَضْمَضَةُ.

رَوَاهُ خَارِجَةُ , عَنْ زَكَرِيَّا , وَقَالَ: «وَانْتِقَاصُ الْمَاءِ يَعْنِي الِاسْتِنْجَاءَ بِالْمَاءِ»


பாடம் :

தலையிலும், உடலிலும் பேண வேண்டிய நபிவழிகள்.

315. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

 

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள்.

(இந்த செய்தியை ) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) விடமிருந்து காரிஜா (ரஹ்) அறிவிக்கும் போது இன்திகாஸுல் மாயி எனும் சொற்றொடருக்கு (மலஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல் என்று பொருள் என்று விளக்கமளித்தார்.

தாரகுத்னீ இமாம் கூறுகின்றார்:

இந்த செய்தியை, தல்க் பின் ஹபீபிடமிருந்து அறிவிப்போரில் முஸ்அப் பின் ஷைபா மட்டுமே நபியின் சொல்லாக  தனித்து அறிவிக்கின்றார்.  ஆனால் அவரை விட பலமான அபூபிஷ்ர், ஸுலைமான் அத்தைமீ போன்றோர் முர்ஸலாக அறிவிக்கின்றனர்.