«خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى وَابْدَأْ بِمَنْ تَعُولُ»
قَالَ: وَمَنْ أَعُولُ يَا رَسُولَ اللَّهِ؟ , قَالَ: ” امْرَأَتُكَ تَقُولُ: أَطْعِمْنِي وَإِلَّا فَارِقْنِي , خَادِمُكَ يَقُولُ: أَطْعِمْنِي وَاسْتَعْمِلْنِي , وَلَدُكَ يَقُولُ: إِلَى مَنْ تَتْرُكُنِي؟
3780. தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். (வாங்கும்) தாழ்ந்த கையை விட (கொடுக்கும்) உயர்ந்த கையே மேலானது. மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!
நபி (ஸல்) அவர்களிடத்தில், “யாருக்கு நான் செலவிடுவது?” என்று கேட்டதற்கு “உனது மனைவிக்குத்தான்” என்று கூறினார்கள். மேலும், “எனக்கு உணவளி அல்லது என்னை விவாகரத்து செய்துவிடு என்று (சொல்லாமல்) சொல்லிக் கொண்டிருக்கிறாள். அதே போன்று உனது வேலையாளும் எனக்கு உணவளி, என்னை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்..” என்று நபியவர்கள் கூறினார்கள்…..
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)