أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ أُمَّهَاتِ الْأَوْلَادِ , وَقَالَ: «لَا يُبَعْنَ وَلَا يُوهَبْنَ وَلَا يُورَثْنَ , يَسْتَمْتِعُ بِهَا سَيِّدُهَا مَا دَامَ حَيًّا فَإِذَا مَاتَ فَهِيَ حُرَّةٌ».
4247. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(உம்முல் வலத் எனும்) குழந்தை பெற்றெடுத்த பெண் அடிமைகளை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மேலும், ‘அவர்கள் விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாகக் கொடுக்கப்படக் கூடாது; வாரிசு உரிமையாக அடையப்படவும் கூடாது; அவளுடைய எஜமான் உயிருடன் இருக்கும் வரை அவளுடன் இன்பம் அனுபவிக்கலாம்; அவர் இறந்துவிட்டால் அவள் சுதந்திரமானவள் ஆவாள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.