🔗

daraqutni-4396: 4396

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا , وَحَرَّمَ حُرُمَاتٍ فَلَا تَنْتَهِكُوهَا , وَحَّدَ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا , وَسَكَتَ عَنْ أَشْيَاءَ مِنْ غَيْرِ نِسْيَانٍ فَلَا تَبْحَثُوا عَنْهَا».

لَفْظُ يَعْقُوبَ


4396. அபூஸஃலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதிப்பும் மாண்புமிக்க அல்லாஹ், சிலவற்றை கட்டாய கடமையாக விதித்துள்ளான். அவற்றை (செய்யாமல்) வீணாக்கிவிடாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை தடை செய்துள்ளான். அவற்றை செய்து விடாதீர்கள்.

அவன் சிலவற்றில் நமக்கு வரம்புகளை விதித்துள்ளான். அவைகளை மீறிவிடாதீர்கள். சிலவற்றை அவன் கூறாமல் விட்டுவிட்டான். இது அவன் மறந்து விட்டதால் அல்ல. (அவன் நம்மீது கொண்ட கொண்ட அன்பினால் ஆகும்). எனவே அவைகளைக் குறித்து வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் வாசக அமைப்பு யஃகூப் பின் இப்ராஹீம் அவர்கள் அறிவித்ததாகும்.