أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَسَأَلْتُهُ فَقَالَ: «إِنَّ الْأَعْمَالَ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»
1792. நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்புவைப்பார்கள். அ(தன் காரணத்)தைப்பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு திங்கள் மற்றும், வியாழக்கிழமைகளில் (அடியார்களின்) அமல்கள் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)