كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ، أَوْ شَرِبَ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفُورٍ، وَلَا مُوَدَّعٍ، وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبِّنَا»
பாடம்:
உணவு உண்ட பின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
2066. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடித்த பின், அல்லது பருகிய பின் ‘அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர மக்ஃபூரின், வலா முவத்தஇன், வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பினா’ என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் மறுக்கப்படாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)