«الْوَلِيمَةُ أَوَّلَ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِيَ مَعْرُوفٌ، وَالثَّالِثَ سُمْعَةٌ وَرِيَاءٌ»
قَالَ قَتَادَةُ: وَحَدَّثَنِي رَجُلٌ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَّهُ دُعِيَ أَوَّلَ يَوْمٍ فَأَجَابَ، وَدُعِيَ الْيَوْمَ الثَّانِيَ فَأَجَابَ، وَدُعِيَ الْيَوْمَ الثَّالِثَ فَحَصَبَ الرَّسُولَ وَلَمْ يُجِبْهُ، وَقَالَ: «أَهْلُ سُمْعَةٍ وَرِيَاءٍ»
2109. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமும், முகஸ்துதியுமாகும்.
அறிவிப்பவர்: ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி)
இதன் அறிவிப்பாளார்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்களை (ஒரு திருமணத்தின்) முதல் நாள் விருந்துக்கு அழைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டார்கள். இரண்டாம் நாளும் அழைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டார்கள். மூன்றாம் நாள் அழைக்கப்பட்டபோது அதில் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள், இவர்கள் விளம்பரத்திற்காகவும், முகஸ்துதியுடனும் விருந்தளிக்கின்றனர் என்று கூறினார்கள் என எனக்கு ஒரு மனிதர் கூறினார்.