🔗

ஸுனன் தாரிமீ: 2195

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«رَأَيْتُ رَبِّي فِي أَحْسَنِ صُورَةٍ» قَالَ: فِيمَ يَخْتَصِمُ الْمَلَأُ الْأَعْلَى؟ فَقُلْتُ: «أَنْتَ أَعْلَمُ يَا رَبِّ»، قَالَ: ” فَوَضَعَ كَفَّهُ بَيْنَ كَتِفَيَّ فَوَجَدْتُ بَرْدَهَا بَيْنَ ثَدْيَيَّ، فَعَلِمْتُ مَا فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَتَلَا {وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ}


பாடம்:

உயர்ந்தோனான அல்லாஹ்வை கனவில் பார்த்தல்.

2195. அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் … அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் (நேரடியாக) செவியுற்றேன்:

நான், என் இறைவனை மிக அழகான வடிவில் கண்டேன். அப்போது அவன், “‘(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு நான், “என் இறைவா! நீயே மிக அறிந்தவன்” என்று கூறினேன்.

உடனே அவன் தன்னுடைய கரத்தை என் இரு தோள்களுக்கிடையே வைத்தான். அதன் குளிர்ச்சியை என் இரு நெஞ்சங்களுக்கிடையே உணர்ந்தேன். அதன் மூலம் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை நான் அறிந்தேன்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள், “உறுதியான நம்பிக்கையாளராக இப்ராஹீம் ஆவதற்காக அவருக்கு வானங்கள் மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.” (அல்குர்ஆன்: 6:75) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.