🔗

ஸுனன் தாரிமீ: 526

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قُلْتُ: لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنِي فُلَانٌ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَرَفَهُ عُمَرُ، قُلْتُ: حَدَّثَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْحَيَاءَ، وَالْعَفَافَ، وَالْعِيَّ، عِيَّ اللِّسَانِ، لَا عِيَّ الْقَلْبِ، وَالْفِقْهَ مِنَ الْإِيمَانِ، وَهُنَّ مِمَّا يَزِدْنَ فِي الْآخِرَةِ، وَيُنْقِصْنَ مِنَ الدُّنْيَا، وَمَا يَزِدْنَ فِي الْآخِرَةِ أَكْثَرُ، وَإِنَّ الْبَذَاءَ، وَالْجَفَاءَ، وَالشُّحَّ، مِنَ النِّفَاقِ، وَهُنَّ مِمَّا يَزِدْنَ فِي الدُّنْيَا، وَيُنْقِصْنَ فِي الْآخِرَةِ، وَمَا يُنْقِصْنَ فِي الْآخِرَةِ أَكْثَرُ»


526. அவ்ன் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம், நபித்தோழர்களில் இன்ன மனிதர் எனக்கு ஹதீஸ்களை அறிவித்தார் என்று கூறினேன். உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவரை தெரிந்துக்கொண்டார்கள்.

மேலும் நான்,

“வெட்கமும், பத்தினித்தனமும்-கற்பொழுக்கமும், குறைவாக பேசுவதும், மார்க்க ஞானமும் ஈமானுடைய அம்சமாகும். இவை மறுமையில் அதிக நன்மையைத் தரும். உலகில் குறைவை ஏற்படுத்தும். இவை மறுமையில் நன்மையைத் தருவதே அதிகமாகும்.

கெட்ட வார்த்தையும், கெட்ட குணமும், கஞ்சத்தனமும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். இவை உலகில் அதிக நன்மையைத் தருவதாக தெரியலாம். ஆனால் மறுமையில் குறைவை ஏற்படுத்தும். இவை மறுமையில் பாதிப்பை ஏற்படுத்துவதே அதிகமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அந்த நபித்தோழர் எனக்கு அறிவித்தார் எனக் கூறினேன்.