🔗

ஸுனன் தாரிமீ: 527

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

خَرَجَ عَلَيْنَا عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ لِصَلَاةِ الظُّهْرِ، وَمَعَهُ قِرْطَاسٌ، ثُمَّ خَرَجَ عَلَيْنَا لِصَلَاةِ الْعَصْرِ وَهُوَ مَعَهُ، فَقُلْتُ لَهُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، مَا هَذَا الْكِتَابُ؟ قَالَ: ” هَذَا حَدِيثٌ حَدَّثَنِي بِهِ عَوْنُ بْنُ عبْدِ اللَّهِ، فَأَعْجَبَنِي فَكَتَبْتُهُ، فَإِذَا فِيهِ هَذَا الْحَدِيثُ


527. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், எங்களுக்கு லுஹர் தொழுகை தொழுவிக்க வந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு ஏடு இருந்தது. பின்பு அஸர் தொழுகை தொழுவிக்க வந்தார்கள். அப்போதும் அவர்களிடம் அந்த ஏடு இருந்தது. எனவே நான் முஃமின்களின் தலைவரே! அது என்ன ஏடு? என்று கேட்டேன். அதற்கவர்கள், இது அவ்ன் பின் அப்துல்லாஹ் எனக்கு அறிவித்த ஹதீஸ்கள் என்று கூறினார். எனவே நான் ஆச்சரியமடைந்து (அவர்களிடம் அனுமதிபெற்று) அதை எழுதிக் கொண்டேன். அப்போது அதில் (ஹதீஸ் எண்-526 இல் உள்ள) மேற்கண்ட செய்தி இடம்பெற்றிருந்தது.