🔗

ஸுனன் தாரிமீ: 556

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ: عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ جَسَدِهِ فِيمَا أَبْلَاهُ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ، وَفِيمَا وَضَعَهُ، وَعَنْ عِلْمِهِ مَاذَا عَمِلَ فِيهِ


556. மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? ஆகிய நான்கு கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது என்று முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅப்துல்லாஹ் (ரஹ்)