«كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَهَبَ إِلَى الْحَاجَةِ أَبْعَدَ»
பாடம்:
இயற்கைக் கடனை நிறைவேற்றச் செல்லுதல்.
686. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் இருந்துள்ளேன். அப்போது, அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதாக இருந்தால் தொலைவான இடத்திற்குச் செல்வார்கள்.