أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْسًا، فَقَالَ: «مَا تَصْنَعُ يَا أَبَا هُرَيْرَةَ؟» قَالَ: أَغْرِسُ غَرْسًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أَدُلُّكَ عَلَى غَرْسٍ خَيْرٌ لَكَ مِنْهُ؟» قُلْتُ: مَا هُوَ؟ قَالَ: «سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ يُغْرَسُ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ»
1887. நிலத்தில் பயிரை நட்டுக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், ‘‘அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன்’’ என்றார்கள்.
‘‘இதனை விட உமக்குச் சிறந்த பயிரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்க, ‘‘அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே!’’ என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘‘சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்’ என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும்’’ என்றார்கள்.
-இதை அபூஹுரைரா (ரலி) கூறியதாக உஸ்மான் பின் அபூஸவ்தா (ரஹ்) அறிவித்தார்.