مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِي وَأَنَا أَدْعُو بِأُصْبُعَيَّ فَقَالَ: «أَحَدٌ، أَحَدٌ» وَأَشَارَ بِالسَّبَّابَةِ
1996. ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஒருவன், ஒருவன் (அல்லது ஒரு விரல், ஒரு விரல்) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.
ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:
மேற்கண்ட (1965, 1966) இரு ஹதீஸ்களின் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அபூ ஸாலிஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஹதீஸை கேட்டிருந்தால் இது புகாரி, முஸ்லிம் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும்.
(அபூ ஸாலிஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஹதீஸை கேட்டுள்ளார் என்றே ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.)