سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِكَلِمَاتٍ مِنَ الْفَزَعِ «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَمِنْ عِقَابِهِ وَمِنْ شَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونَ»
قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَمَنْ بَلَغَ مِنْ وَلَدٍ عَلَّمَهُنَّ إِيَّاهُ فَقَالَهُنَّ عِنْدَ قَوْمِهِ وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا فَعَلَّقَهَا فِي عُنُقِهِ.
2010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், ”அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ இகாபிஹீ, வமின் ஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்திஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்று கூறட்டும்.
(பொருள் : அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த அவரது பருமடைந்த பிள்ளைகளும் தூங்கும் சமயம் இதை ஓதுவார்கள். பருவமடையாத பிள்ளைகள் என்றால் இதை எழுதி அவர்களின் கழுத்தில் மாட்டிவிடுவார்கள்.