🔗

ஹாகிம்: 2222

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«مَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُونَ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ، فَقَدْ ضَادَّ اللَّهَ فِي أَمْرِهِ، وَمَنْ مَاتَ وَعَلَيْهِ دَيْنٌ، فَلَيْسَ ثَمَّ دِينَارٌ، وَلَا دِرْهَمٌ، وَلَكِنَّهَا الْحَسَنَاتُ وَالسَّيِّئَاتُ، وَمَنْ خَاصَمَ فِي بَاطِلٍ وَهُوَ يَعْلَمُ، لَمْ يَزَلْ فِي سَخَطِ اللَّهِ حَتَّى يَنْزِعَ، وَمَنْ قَالَ فِي مُؤْمِنٍ مَا لَيْسَ فِيهِ، حُبِسَ فِي رَدْغَةِ الْخَبَالِ حَتَّى يَأْتِيَ بِالْمَخْرَجِ مِمَّا قَالَ»


2222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றைத் தடுக்கும் விதமாக யாருடைய பரிந்துரை அமைகிறதோ, அவர் அல்லாஹ்வின் கட்டளையையே எதிர்த்தவர் ஆவார்.

எவர் கடன் உள்ள நிலையில் மரணிக்கிறாரோ, அங்கே (மறுமையில் அதை ஈடுகட்ட) தீனாரோ திர்ஹமோ இருக்காது; மாறாக நன்மைகளும் தீமைகளுமே இருக்கும்.

எவர் ஒரு வழக்கு அநியாயமானது என்று தெரிந்தே அதில் (சாதகமாக) வாதிடுகிறாரோ, அவர் அதிலிருந்து விலகும் வரை அல்லாஹ்வின் கோபத்திலேயே இருப்பார்.

எவர் ஒரு முஃமினைப் பற்றி அவரிடம் இல்லாத குறையை அபாண்டமாகச் சொல்கிறாரோ, அவர் தான் சொன்னதிலிருந்து (தப்பிப்பதற்கான ஆதாரத்தையோ அல்லது பரிகாரத்தையோ) கொண்டு வரும் வரை அவரை ‘ரத்ஃகதுல் கபால்’ (எனும் நரகவாசிகளின் உடலில் இருந்து வழியும் சீழ் மற்றும் அழுக்குகள் நிறைந்த) இடத்தில் அல்லாஹ் தங்க வைப்பான்.