«لَا ضَرَرَ وَلَا ضِرَارَ، مَنْ ضَارَّ ضَارَّهُ اللَّهُ، وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ»
2345. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கோ பிறருக்கோ தீங்கு இழைத்துக் கொள்வதும் இல்லை, (பதிலுக்குப்) பிறருக்குத் தீங்கு விளைவிப்பதும் இல்லை. எவர் (பிறருக்கு) தீங்கு செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் தீங்கிழைப்பான் (தண்டிப்பான்). எவர் (பிறரை) சிரமப்படுத்துகிறாரோ, அல்லாஹ் அவரைச் சிரமத்திற்குள்ளாக்குவான்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் இமாம் முஸ்லிம் அவர்களின் நிபந்தனைக்கு ஏற்ப, சரியான அறிவிப்பாளர்தொடரைக் கொண்டதாகும். ஆனால், (புகாரீ, முஸ்லிம் அறிஞர்களான) அவ்விருவரும் இதனை தங்களது நூல்களில் பதிவு செய்யவில்லை.