🔗

ஹாகிம்: 3035

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

” لَقَدْ أَخْرَجَ اللَّهُ آدَمَ مِنَ الْجَنَّةِ قَبْلَ أَنْ يَدْخُلَهَا أَحَدٌ، قَالَ اللَّهُ تَعَالَى: {إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً، قَالُوا: أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ} [البقرة: 30] وَقَدْ كَانَ فِيهَا قَبْلَ أَنْ يُخْلَقَ بِأَلْفَيْ عَامٍ الْجِنُّ بَنُو الْجَانِّ، فَأَفْسَدُوا فِي الْأَرْضِ، وَسَفَكُوا الدِّمَاءِ، فَلَمَّا قَالَ اللَّهُ تَعَالَى: {إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً، قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ} [البقرة: 30] يَعْنُونَ الْجِنَّ بَنِي الْجَانِّ، فَلَمَّا أَفْسَدُوا فِي الْأَرْضِ بَعَثَ عَلَيْهِمْ جُنُودًا مِنَ الْمَلَائِكَةِ، فَضَرَبُوهُمْ حَتَّى أَلْحَقُوهُمْ بِجَزَائِرِ الْبُحُورِ. قَالَ: فَقَالَتِ الْمَلَائِكَةُ: {أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا} [البقرة: 30] كَمَا فَعَلَ أُولَئِكَ الْجِنُّ بَنُو الْجَانِّ؟ قَالَ: فَقَالَ اللَّهُ: {إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ} [البقرة: 30]


3035. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக அல்லாஹ், மற்றவர்கள் நுழைவதற்கு முன்பே ஆதம் (அலை) அவர்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினான்.

அல்லாஹ் கூறுகிறான்: “பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறியபோது “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? (அல்குர்ஆன்: 2:30) என்று வானவர்கள் கூறினர்.

(இது ஏனெனில்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் ஜின் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்தினர்.

அல்லாஹ், “பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” எனக் கூறியபோது, அந்த ஜின் இனத்தையே (உதாரணமாகக் கொண்டு) வானவர்கள் அப்படிக் கேட்டனர்.

ஜின்கள் பூமியில் குழப்பம் விளைவித்தபோது, அவர்களுக்கு எதிராக வானவர்களின் ஒரு படையை அல்லாஹ் அனுப்பினான். அவர்கள் ஜின்களை அடித்துத் துரத்தி, கடல்களின் தீவுகளுக்குள் விரட்டினர்.

எனவே தான் வானவர்கள், “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? (அல்குர்ஆன்: 2:30) அதாவது, அந்த ஜின் இனத்தவர்கள் செய்தது போன்றா? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ், “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” (அல்குர்ஆன்: 2:30) என்று கூறினான்.