فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ {أُمَمٌ أَمْثَالُكُمْ} [الأنعام: 38] قَالَ: ” يُحْشَرُ الْخَلْقُ كُلُّهُمْ يَوْمَ الْقِيَامَةِ الْبَهَائِمُ، وَالدَّوَابُّ، وَالطَّيْرُ، وَكُلُّ شَيْءٍ فَيَبْلُغُ مِنْ عَدْلِ اللَّهِ أَنْ يَأْخُذَ لِلْجَمَّاءِ مِنَ الْقَرْنَاءِ، ثُمَّ يَقُولُ: كُونِي تُرَابًا فَذَلِكَ {يَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا} [النبأ: 40]
3231. அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள். (அல்குர்ஆன் 6:38) எனும் இறைவசனம் குறித்து கூறியதாவது:
“மறுமை நாளில் கால்நடைகள், ஊர்ந்து செல்பவைகள், பறவைகள் மற்றும் அனைத்துப் படைப்புகளும் ஒன்று திரட்டப்படும். அல்லாஹ்வின் நீதியானது எந்த அளவு (துல்லியமாக) இருக்குமென்றால், கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை (இவ்வுலகில்) முட்டியிருந்தால், அதற்காக அந்தக் கொம்பில்லாத ஆட்டிற்குப் பழிவாங்கித் தரப்படும்.
பின்னர் அல்லாஹ் (அம்மிருகங்களைப் பார்த்து), ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என்று கூறுவான். அதைக் காணும் போதே இறைமறுப்பாளன்,
“அந்தோ பரிதாபம்! நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா?” என்று கூறுவான். (அல்குர்ஆன்: 78:40)
அறிவிப்பவர்: யஸீத் பின் அஸம் (ரஹ்)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
(இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும்) ஜஅஃபர் அல்ஜித்ரீ (அல்ஜஸரீ என்பதே சரி) என்பவர் ‘ஜஅஃபர் பின் புர்கான்’ ஆவார். இவரை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார். எனவே, இச்செய்தி இமாம் முஸ்லிமின் நிபந்தனைப்படி சரியான தரத்தில் உள்ளது. ஆனால் இதை புகாரீ, முஸ்லிம் அறிஞர்கள் (தமது நூல்களில்) பதிவு செய்யவில்லை.