🔗

ஹாகிம்: 345

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»


345. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரிடம் (அவர் அறிந்துள்ள) கல்வியைப் பற்றி வினவப்படும் போது, அதை அவர் மறைத்தால் மறுமைநாளில் அவருக்கு நெருப்பாலான கடிவாளத்தை அல்லாஹ் மாட்டுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

(இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த அபூஅலீ அவர்களிடம்) நீங்கள் கூறும் அறிவிப்பாளர்தொடரில் உள்ள அஸ்ஹர் பின் மர்வானோ அல்லது உங்கள் ஆசிரியரான முஹம்மத் பின் அஹ்மத் அவர்களே தவறிழைத்துள்ளார்கள். அவர்கள் தவறிழைப்பது ஒன்றும் அரிதானதல்ல.

இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த அபூபக்ர் பின் இஸ்ஹாக், அலீ பின் ஹம்ஷாத் ஆகியோர் அலீ பின் ஹகம் அவர்களுக்கும், அதாஃ அவர்களுக்கும் இடையில் தான், ஒரு அறியப்படாத மனிதரைக் கூறி அறிவித்தனர் என்று கூறினேன். அதை அபூஅலீ அவர்களும் சரியென்று ஏற்றுக்கொண்டார்.

பிறகு இந்த கருத்தில் வரும் பலஅறிவிப்பாளர்தொடர்களை நான் ஒன்றுசேர்த்து பார்த்தபோது தான், பலரும் அதாஃ அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டு அறிவிப்பதாகத்தான் அறிவித்திருந்தார்கள்.

மேலும் இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக; எந்த குறையும் இல்லாத அறிவிப்பாளர்தொடரும் நமக்கு கிடைத்தது. (பார்க்க: ஹாகிம்-346)