🔗

ஹாகிம்: 3733

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ تَرْعَدُ فَرَائِصُهُ قَالَ: فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ فَإِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ كَانَتْ تَأْكُلُ الْقَدِيدَ فِي هَذِهِ الْبَطْحَاءِ» قَالَ: ثُمَّ تَلَا جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَجَلِيُّ: {وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَنْ يَخَافُ وَعِيدِ} [ق: 45]


3733. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டார். அப்போது அவர்  உடல் நடுங்கினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சாதாரணமாக இருப்பீராக! இந்த பத்ஹா பகுதியில் உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குறைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’’ என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இதை அறிவித்தபின்,

(முஹம்மதே!) அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். நீர் அவர்கள் மீது அடக்குமுறை செய்பவர் அல்லர். எனது எச்சரிக்கையை அஞ்சுபவருக்கு குர்ஆன் மூலம் அறிவுரை கூறுவீராக! (அல்குர்ஆன் 50:45) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.