🔗

ஹாகிம்: 3778

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ: إِنَّ اللَّهَ يَنْفَعُنَا بِالْأَعْرَابِ وَمَسَائِلِهِمْ أَقْبَلَ أَعْرَابِيٌّ يَوْمًا فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ ذَكَرَ اللَّهُ فِي الْقُرْآنِ شَجَرَةً مُؤْذِيَةً وَمَا كُنْتُ أَرَى أَنَّ فِي الْجَنَّةِ شَجَرَةٌ تُؤْذِي صَاحِبَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا هِيَ؟» قَالَ: السِّدْرُ، فَإِنَّ لَهَا شَوْكًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” {فِي سِدْرٍ مَخْضُودٍ} [الواقعة: 28] يَخْضِدُ اللَّهُ شَوْكَهُ فَيُجْعَلُ مَكَانَ كُلِّ شَوْكَةٍ ثَمَرَةٌ، فَإِنَّهَا تُنْبِتُ ثَمَرًا تُفْتَقُ الثَّمَرَةُ مَعَهَا عَنِ اثْنَيْنِ وَسَبْعِينَ لَوْنًا مَا مِنْهَا لَوْنٌ يُشْبِهُ الْآخَرَ


3778. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்கள், “கிராமவாசிகளாலும், அவர்களின் கேள்வியாலும் அல்லாஹ் நமக்கு நன்மையையே தருகின்றான் என்று (சிலசமயம்) கூறுவார்கள். (ஒரு தடவை) ஒரு கிராமப்புற அரபி வந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் குர்ஆனில் துன்பம் தரும் ஒரு மரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். சொர்க்கவாசிக்கு துன்பம் தரும் மரம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “அது எந்த மரம்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “அது இலந்தை மரம். அதற்கு முள் இருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியில் இருப்பார்கள்” என்ற (அல்குர்ஆன்: 56:28) இறைவசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, “அதன் முட்களை அல்லாஹ் நீக்கிவிட்டு, ஒவ்வொரு முள்ளின் இடத்திலும் ஒரு கனியை உருவாக்குவான். அது எழுபத்திரண்டு நிறங்களில் கனி கொடுக்கும். அதில் ஒரு நிறம் கூட மற்றொன்றை ஒத்திருக்காது” என்று கூறினார்கள்.