جَاءَتْ عَجُوزٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عِنْدِي، فَقَالَ: لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَنْتِ؟» قَالَتْ: أَنَا جَثَّامَةُ الْمُزَنِيَّةُ، فَقَالَ: «بَلْ أَنْتِ حَسَّانَةُ الْمُزَنِيَّةُ، كَيْفَ أَنْتُمْ؟ كَيْفَ حَالُكُمْ؟ كَيْفَ كُنْتُمْ بَعْدَنَا؟» قَالَتْ: بِخَيْرٍ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، فَلَمَّا خَرَجَتْ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، تُقْبِلُ عَلَى هَذِهِ الْعَجُوزِ هَذَا الْإِقْبَالَ؟ فَقَالَ: «إِنَّهَا كَانَتْ تَأْتِينَا زَمَنَ خَدِيجَةَ، وَإِنَّ حُسْنَ الْعَهْدِ مِنَ الْإِيمَانِ»
40. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்த சமயத்தில், (அவர்களைச் சந்திக்க) ஒரு மூதாட்டி வந்தார். அவரிடம், “நீங்கள் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், “நான் ஜஸ்ஸாமதுல் முஸனிய்யா (சடலம்-முஸனீ கிளையை சேர்ந்தவள் என்ற பெயருடைவர்) என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை (இனி) உங்கள் பெயர் ஹஸ்ஸானதுல் முஸனிய்யா (அழகானவள்-முஸனீ கிளையை சேர்ந்தவள்) என்று இருக்கட்டும் என்று கூறிவிட்டு, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் நிலை எவ்வாறு உள்ளது? எங்களுக்கு பிறகு எப்படி இருந்தீர்கள்? என்று விசாரித்தார்கள். அதற்கு அம்மூதாட்டி, “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தையும், தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று கூறினார்.
அம்மூதாட்டி சென்ற பிறகு, அல்லாஹ்வின் தூதரே! இந்த மூதாட்டியை இந்தளவிற்கு வரவேற்று விசாரித்தீர்களே! (யார் இவர்?) என்று கேட்டேன். அதற்கவர்கள், “இவர், நான் கதீஜா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த காலத்தில் (கதீஜாவைக் காண) அடிக்கடி வந்து செல்வார்; (பிறரிடம்) நல்ல முறையில் நடந்துக் கொள்வதும் ஈமானில் அடங்கும்” என்று பதிலளித்தார்கள்.
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இது புகாரீ, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைக்குட்பட்ட சரியான ஹதீஸாகும். இதில் இடம்பெற்றுள்ள அறிவிப்பாளர்களை அதிகமான ஹதீஸ்களில் இருவருமே ஆதாரமாக ஏற்றுள்ளனர். மேலும் இதில் எந்த (இல்லத்) குறையும் இல்லை.