🔗

ஹாகிம்: 4110

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا} [الأحزاب: 69] قَالَ: ” صَعِدَ مُوسَى وَهَارُونُ الْجَبَلَ فَمَاتَ هَارُونُ فَقَالَتْ بَنُو إِسْرَائِيلَ لِمُوسَى: أَنْتَ قَتَلْتَهُ كَانَ أَشَدَّ حُبًّا لَنَا مِنْكَ وَأَلْيَنَ لَنَا مِنْكَ فَآذَوْهُ فِي ذَلِكَ، فَأَمَرَ اللَّهُ الْمَلَائِكَةَ فَحَمَلَتْهُ فَمَرُّوا بِهِ عَلَى مَجَالِسِ بَنِي إِسْرَائِيلَ حَتَّى عَلِمُوا بِمَوْتِهِ فَدَفَنُوهُ وَلَمْ يَعْرِفْ قَبْرَهُ إِلَّا الرَّخَمُ وَإِنَّ اللَّهَ جَعَلَهُ أَصَمَّ أَبْكَمَ


4110. நம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொந்தரவு கொடுத்தோர் போல் ஆகி விடாதீர்கள்! அவர்கள் கூறியதிலிருந்து அவரை அல்லாஹ் நீக்கினான். அல்லாஹ்விடம் அவர் தகுதியுடையவராக இருந்தார் எனும் (அல்குர்ஆன்: 33:69) ஆவது இறைவசனத்தைக் குறித்து அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு தடவை மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் ஒரு மலையின் மீது ஏறினார்கள். (மலையில் திடீரென) ஹாரூன் (அலை) அவர்கள் இறந்துவிட்டார்கள். பனூஇஸ்ரவேலர்கள், மூஸாவே! ஹாரூன் (அலை) அவர்கள், உம்மைவிட எங்களை அதிகம் நேசிப்பவராக இருந்தார். உம்மைவிட எங்களிடம் மென்மையாக நடப்பவராக இருந்தார். எனவே நீர்தான் அவரைக் கொன்றுவிட்டாய்! என்று கூறி இதன்மூலம் மூஸா (அலை) அவர்களுக்கு தொல்லை கொடுத்தனர்.

எனவே ஹாரூன் (அலை) அவர்களின் உடலை பனூஇஸ்ரவேலர்கள் உள்ள இடத்துக்கு உடலை கொண்டுவருமாறு அல்லாஹ், வானவர்களுக்கு கட்டளையிட்டான். அவர்கள் உடலைக் கொண்டுவந்து (அவரின் மரணம் குறித்து வானவர்கள் கூறியதால்) அவரின் மரணத்தைப் பற்றி  பனூஇஸ்ரவேலர்கள் அறிந்துக் கொண்டனர். (பிறகு) அவரை அடக்கம் செய்தனர்.

ஹாரூன் (அலை) அவர்களின் கப்ர் உள்ள இடம் (ரகம் எனும்) மஞ்சள் பாறு-எகிப்திய பிணந்தின்னிக் கழுகுக்கு மட்டுமே தெரியும். அல்லாஹ் அதை செவிடாகவும், ஊமையாகவும் ஆக்கிவிட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இது சரியான அறிவிப்பாளர்தொடராகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை.