وَكَانَ مُجَابَ الدَّعْوَةِ، أَنَّهُ أُمِّرَ عَلَى جَيْشٍ، فَدَرِبَ الدُّرُوبَ، فَلَمَّا أَتَى الْعَدُوَّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَا يَجْتَمِعُ مَلَأٌ فَيَدْعُو بَعْضُهُمْ، وَيُؤَمِّنُ الْبَعْضُ، إِلَّا أَجَابَهُمُ اللَّهُ»
ثُمَّ إِنَّهُ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «اللَّهُمُ احْقِنْ دِمَاءَنَا، وَاجْعَلْ أُجُورَنَا أُجُورَ الشُّهَدَاءِ» فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ إِذْ نَزَلَ الْهُنْبَاطُ أَمِيرُ الْعَدُوِّ، فَدَخَلَ عَلَى حَبِيبٍ سُرَادِقِهِ
5478. அப்துல்லாஹ் பின் ஹுபைரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் பிரார்த்தனைகள் ஏற்கப்படுபவராக இருந்தார். அவர்கள் ஒரு முறை, ஒரு படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். பாதைகளை அறிந்து சென்ற அவர், எதிரியை சந்தித்தபோது கூறினார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கீழ்க்கண்டவாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்:
ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர், பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை.
பின்னர் ஹபீப் (ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து, தஸ்பீஹ் செய்துவிட்டு இவ்வாறு பிரார்த்தித்தார்:
“இறைவா! எங்கள் இரத்தங்களைப் பாதுகாத்தருள்வாயாக! எங்கள் நற்கூலியை ஷஹீத்களின் நற்கூலியாக ஆக்குவாயாக!”
அவர்கள் இவ்வாறு இருந்த போது, எதிரிப் படைத்தலைவர் ஹுன்பாத் வந்து, ஹபீப் (ரலி) அவர்களின் படைக்குள் நுழைந்தார்.