«إِنَّ الْمُؤْمِنَ يَأْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ وَلَا يُؤْلَفُ»
59. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராகவும், பிறர் அவருடன் பழகக்கூடிய நிலையிலும் இருக்கவேண்டும். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இது புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களின் நிபந்தனையின்படி உள்ள சரியான செய்தியாகும். இதில் நான் எந்த குறையையும் அறியவில்லை. எனினும் அவ்விருவரும் இதை (அவர்களின் நூல்களில்) பதிவு செய்யவில்லை.