«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعُهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»
وَفِي حَدِيثِ أَبِي بَكْرِ بْنِ إِسْحَاقَ، قَالَ: وَحَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمَّارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ بِمِثْلِهِ.
729. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
அபூபக்ர் பின் இஸ்ஹாக் அவர்கள், இந்த செய்தியை ஹம்மாத் பின் ஸலமா —> அம்மார் பின் அபூஅம்மார் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளார்.
மேற்கண்ட செய்தி முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை.