اشْتَكَى رَجُلٌ بَطْنَهُ مِنَ الصَّفَرِ فَنُعِتَ لَهُ السَّكَرِ فَذَكَرَ ذَلِكَ لِعَبْدِ اللَّهِ، فَقَالَ: «إِنَّ اللَّهَ تَعَالَى لَمْ يَجْعَلْ شِفَاءَكُمْ فِيمَا حَرَّمَ عَلَيْكُمْ»
7509. ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அப்போது அவருக்கு ‘அஸ்ஸகர்’ (மதுபானம்) மருந்துப் பொருளாகப் பரிந்துரைக்கப்பட்டது. அவர் அதைப்பற்றி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ், தான் தடை செய்த பொருட்களில் உங்களுக்கு எந்த நிவாரணத்தையும் ஆக்கவில்லை” என்று கூறினார்கள்.