قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هِرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاءَكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ
7846. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு அறிவுரை கூறும் போது கூறினார்கள்:
ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்பு ஐந்து விஷயங்களை நீ பயன்படுத்திக்கொள்!
1 . முதுமை வருவதற்கு முன்பு உனது இளமை.
2 . நோய் வருவதற்கு முன்பு உனது ஆரோக்கியம்.
3 . வறுமை வருவதற்கு முன்பு உனது செல்வம்.
4 . உனக்கு வேலைப்பளு வருவதற்கு முன்பு உனது ஓய்வு.
5 . உனக்கு மரணம் வருவதற்கு முன்பு உனது வாழ்க்கை.