«إِذَا قَالَ الرَّجُلُ لِلْمُنَافِقِ يَا سَيِّدُ فَقَدْ أَغْضَبَ رَبَّهُ تَبَارَكَ وَتَعَالَى»
7865. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், நயவஞ்சகனை “ஸய்யிதே-தலைவரே” என்று அழைத்தால் அவர் தனது இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டார்.
அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. ஆனால் இதை புகாரியும் முஸ்லிமும் தங்கள் நூல்களில் பதிவு செய்யவில்லை.