” أَوَّلُ مَا تَفْقِدُونَ مِنْ دِينِكُمُ الْخُشُوعُ، وَآخِرُ مَا تَفْقِدُونَ مِنْ دِينِكُمُ الصَّلَاةُ، وَلَتُنْقَضَنَّ عُرَى الْإِسْلَامِ عُرْوَةً عُرْوَةً، وَلَيُصَلِّيَنَّ النِّسَاءُ وَهُنَّ حُيَّضٌ، وَلَتَسْلُكُنَّ طَرِيقَ مَنْ كَانَ قَبْلَكُمْ حَذْوَ الْقُذَّةِ بِالْقُذَّةِ، وَحَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، لَا تُخْطِئُونَ طَرِيقَهُمْ، وَلَا يُخْطِأَنَّكُمْ حَتَّى تَبْقَى فِرْقَتَانِ مِنْ فِرَقٍ كَثِيرَةٍ فَتَقُولُ إِحْدَاهُمَا: مَا بَالُ الصَّلَوَاتِ الْخَمْسِ، لَقَدْ ضَلَّ مَنْ كَانَ قَبْلَنَا إِنَّمَا قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: {أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ} [هود: 114] لَا تُصَلُّوا إِلَّا ثَلَاثًا، وَتَقُولُ الْأُخْرَى: إِيمَانُ الْمُؤْمِنِينَ بِاللَّهِ كَإِيمَانِ الْمَلَائِكَةِ مَا فِينَا كَافِرٌ وَلَا مُنَافِقٌ، حَقٌّ عَلَى اللَّهِ أَنْ يَحْشُرَهُمَا مَعَ الدَّجَّالِ
8448. ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் மார்க்கத்திலிருந்து நீங்கள் முதலில் இழக்கப்போவது உள்ளச்சம். கடைசியாக இழக்கப்போவது தொழுகை.
இஸ்லாத்தின் பிணைப்புகள் ஒவ்வொன்றாக உடைக்கப்படும்:
பெண்கள் மாதவிடாய் காலத்தில் தொழுவார்கள்.
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழியை, அடிக்கு அடியாக, ஒரு செருப்பு இன்னொரு செருப்பை பின்பற்றுவதைப் போல் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்களின் வழியை நீங்கள் தவறவும் மாட்டீர்கள்; அவர்கள் உங்களைவிட்டு தவறவும் மாட்டார்கள்.
பல கூட்டங்களில் இரண்டு கூட்டங்கள் மட்டும் எஞ்சும். அவற்றில் ஒரு கூட்டத்தினர் கூறுவார்கள்: “எதுக்கு ஐந்து நேரத் தொழுகைகள்? நமக்கு முன்னிருந்தவர்கள் வழிதவறிவிட்டார்கள். அல்லாஹ்வோ, “பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக!”(அல்குர்ஆன்: 11:114) என்று மட்டுமே கூறியுள்ளான். எனவே, மூன்று தொழுகைகளைத் தவிர வேறு தொழ வேண்டாம்.
மற்றொரு கூட்டத்தினர் கூறுவார்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டோரின் ஈமான் வானவர்களின் ஈமானைப் போன்றது. எனவே எங்களில் காஃபிரோ அல்லது முனாஃபிக்கோ (நயவஞ்சகரோ) இல்லை.
இந்த இரண்டு கூட்டத்தினரையும் தஜ்ஜாலுடன் அல்லாஹ் ஒன்று சேர்ப்பது அவனுக்குக் கட்டாயமானதாகும்.