كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَأَتَاهُ فَتًى يَسْأَلُهُ عَنْ إِسْدَالِ الْعِمَامَةِ، فَقَالَ ابْنُ عُمَرَ: سَأُخْبِرُكَ عَنْ ذَلِكَ بِعِلْمٍ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى، قَالَ: كُنْتُ عَاشِرَ عَشَرَةٍ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ، وَعَلِيٌّ، وَابْنُ مَسْعُودٍ، وَحُذَيْفَةُ، وَابْنُ عَوْفٍ، وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، فَجَاءَ فَتًى مِنَ الْأَنْصَارِ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ جَلَسَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟ قَالَ: «أَحْسَنُهُمْ خُلُقًا» قَالَ: فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ؟ قَالَ: «أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا وَأَحْسَنُهُمْ لَهُ اسْتِعْدَادًا قَبْلَ أَنْ يَنْزِلَ بِهِمْ أُولَئِكَ مِنَ الْأَكْيَاسِ» ثُمَّ سَكَتَ الْفَتَى
وَأَقْبَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ، خَمْسٌ إِنِ ابْتُلِيتُمْ بِهِنَّ وَنَزَلَ فِيكُمْ أَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ: لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يَعْمَلُوا بِهَا إِلَّا ظَهَرَ فِيهِمُ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ، وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمُؤْنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ، وَلَمْ يَمْنَعُوا الزَّكَاةَ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ، وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا، وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سُلِّطَ عَلَيْهِمْ عَدُوُّهُمْ مَنْ غَيْرِهِمْ وَأَخَذُوا بَعْضَ مَا كَانَ فِي أَيْدِيهِمْ، وَمَا لَمْ يَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ إِلَّا أَلْقَى اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ “
ثُمَّ أَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ يَتَجَهَّزُ لِسَرِيَّةٍ بَعَثَهُ عَلَيْهَا، وَأَصْبَحَ عَبْدُ الرَّحْمَنِ قَدِ اعْتَمَّ بِعِمَامَةٍ مَنْ كَرَابِيسَ سَوْدَاءَ، فَأَدْنَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَقَضَهُ وَعَمَّمَهُ بِعِمَامَةٍ بَيْضَاءَ، وَأَرْسَلَ مِنْ خَلْفِهِ أَرْبَعَ أَصَابِعَ أَوْ نَحْوَ ذَلِكَ وَقَالَ: «هَكَذَا يَا ابْنَ عَوْفٍ اعْتَمَّ فَإِنَّهُ أَعْرَبُ وَأَحْسَنُ» ثُمَّ أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا أَنْ يَدْفَعَ إِلَيْهِ اللِّوَاءَ فَحَمِدَ اللَّهَ وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: خُذِ ابْنَ عَوْفٍ فَاغْزُوا جَمِيعًا فِي سَبِيلِ اللَّهِ فَقَاتِلُوا مَنْ كَفَرَ بِاللَّهِ، لَا تَغُلُّوا وَلَا تَغْدِرُوا، وَلَا تُمَثِّلُوا، وَلَا تَقْتُلُوا وَلِيدًا، فَهَذَا عَهْدُ اللَّهِ وَسِيرَةُ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَلَّمَ
8623. அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு இளைஞர் வந்து தலைப்பாகை அணிவது குறித்து அவரிடம் கேட்டார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் நாடினால் இது குறித்து நான் உனக்குத் தெளிவாக அறிவிப்பேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மஸ்ஜிதில் பத்துப் பேரில் பத்தாவதாக இருந்தேன். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), ஹுதைஃபா (ரலி), இப்னு அவ்ஃப் (ரலி), அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் தான் மற்ற ஒன்பது பேர்.
அப்போது அன்ஸாரி இளைஞர் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு அமர்ந்தார். பின்னர் அவர், “அல்லாஹ்வின் தூதரே! முஃமின்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நற்குணம் உடையவர் தான்” என்று பதிலளித்தார்கள். பிறகு அந்த இளைஞர், “முஃமின்களில் மிகவும் புத்திசாலி யார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் மரணத்தை அதிகமாக நினைப்பவரும், அது வருவதற்கு முன்பே அதற்காகத் தயாராக இருப்பவரும் தான் மிகவும் புத்திசாலி” என்று பதிலளித்தார்கள். பிறகு அந்த இளைஞர் அமைதியாகிவிட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞரை நோக்கியவாறே, “முஹாஜிர்களே! ஐந்து விஷயங்களால் நீங்கள் சோதிக்கப்படும்போது (அவற்றை நீங்கள் அடையாமல் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) ஐந்து விளைவுகளைக் காண்பீர்கள் என்று கூறினார்கள். அவை:
1 . ஒரு சமுதாயத்தில் மானக்கேடான செயல் (விபச்சாரம்) பகிரங்கமாக வெளிப்பட்டால் அப்போது அவர்களிடையே கொள்ளை நோயும், அவர்களுக்கு முன் சென்றுவிட்ட மக்களிடம் இல்லாதிருந்த நோய்களும் பரவ ஆரம்பித்துவிடும்.
2 . ஒரு சமுதாயம் அளவையிலும் நிறுவையிலும் குறைத்(து மோசடி செய்)தால், அவர்கள் பஞ்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும், ஆட்சியாளர்களின் அநியாயத்தாலும் பிடிக்கப்படுவார்கள்.
3 . ஒரு சமுதாயம் தங்கள் செல்வத்தின் ஸகாத்தை வழங்காமல் தடுத்து வைத்துக்கொண்டால், அவர்களுக்கு வானத்திலிருந்து மழை வருவது தடுக்கப்பட்டு விடும். கால்நடைகள் மட்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கு மழை பொழிந்திருக்காது.
4 . ஒரு சமுதாயம் அல்லாஹ்வுடைய உடன்படிக்கையையும், அவனுடைய தூதருடைய உடன்படிக்கையையும் மீறிக் கொண்டிருந்தால், அல்லாஹ் அவர்களுக்கு வெளியிலிருந்து ஒரு எதிரியை ஏற்படுத்தி, அவர்கள் கைகளிலுள்ள சிலவற்றை அவன் கைப்பற்றுவான்.
5 . ஒரு சமுதாயத்தின் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்காமலும், அல்லாஹ் அருளியதை தேர்ந்தெடுக்காமலும் இருந்தால், அல்லாஹ் அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிடுவான்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை ஒரு படைப் பிரிவுக்குத் தலைவராக நியமித்து புறப்படத் தயாராகும்படி கட்டளையிட்டார்கள். அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள், பருத்தியினால் செய்யப்பட்ட தடித்த கருப்பு நிற தலைப்பாகை அணிந்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை அருகில் அழைத்து, அவரது தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு, வெண்ணிறத் தலைப்பாகையை அணிவித்தார்கள். அதன் ஒரு பகுதியை அவரது பின்புறத்தில் நான்கு விரல் நீளமோ அல்லது அதைவிடக் குறைவாகவோ தொங்கவிட்டார்கள்.
மேலும் கூறினார்கள்: “இப்னு அவ்ஃபே! இவ்வாறே தலைப்பாகை அணிவீராக. இது மிகவும் அழகாகவும், கண்ணியமாகவும் இருக்கிறது.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், கொடியை அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார்கள்.
பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறிவிட்டு, “இப்னு அவ்ஃபே! இதைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் உங்களுடன் உள்ளவர்களும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யுங்கள். அல்லாஹ்வை நிராகரித்தவர்களுடன் போரிடுங்கள். மோசடி செய்யாதீர்கள், துரோகம் செய்யாதீர்கள், (எதிரிகளின் உடலை) சிதைக்காதீர்கள், குழந்தைகளைக் கொல்லாதீர்கள். இது அல்லாஹ்வின் வாக்குறுதியும், அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுமாகும்” என்று கூறினார்.