🔗

இப்னு ஹிப்பான்: 1467

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

أَنَّهُ ذَكَرَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ: «مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ بُرْهَانٌ وَلَا نُورٌ وَلَا نَجَاةٌ، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ وَهَامَانَ وَفِرْعَوْنَ وَأُبَيِّ بْنِ خَلَفٍ»


1467. நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தொழுகையைப் பற்றி குறிப்பிட்டார்கள். அப்போது யார் அதை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும். மேலும் யார் அதை பேணவில்லையோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் வெற்றியாகவும் ஆதாரமாகவும் இருக்காது.

மேலும் அவர் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபைய்யு பின் கலஃப் ஆகியாருடன் இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)